இயன்றும் இயலாமை
இயலாமை இல்லாமை
அரியணை வென்றும்
ஆரவாரம் இல்லை
ஏழ்மையிலும் ஏற்பார் இல்லை
தொடர்பற்ற வார்த்தைகள்
தொடர்ந்து வந்த உறவுகள்
துறந்துவிட்ட நினைவுகளில் நான்,
மழைச் சாரலில்
சூரியனின் அஸ்தமனத்தில்
நதியின் ஜதியில்
வானவில்லின் உடையில்
நிலவின் மடியில்
நட்சத்திரங்களின் ஒளியில்
மலையளவு எண்ணங்களில்
வானளவு உயரத்தில்
ஆழ்கடலின் அமைதியில் நான்,
நானாக இல்லை நான்
வேறாக வில்லை, இதை
அறியாமல் இல்லை
முற்பாதி கனவிலும்,
பிற்பாதி கற்பனையிலும் தோன்றிய
சில காட்சிகள் என.
கனவிலும், கற்பனையிலும்
ஆன்மா ஒன்றாகினும்
ஆத்மா பலவாயின.