Showing posts with label நாணம். Show all posts
Showing posts with label நாணம். Show all posts

Saturday, July 24, 2010

சாயல்!

உனைக் கெஞ்சி கொஞ்ச
அஞ்சினாய்... அச்சம்...

உனை வர்ணித்த கவியில்
பொய்யும் உண்டென
அறியாய்... மடம்...

கண் பார்த்தாய்...
கன்னம் சிவந்தாய்...
முகம் மறைத்தாய்... நாணம்...

என் அன்பில் விழுந்த நீ...
வேறொரு ஆண்...
நெருங்கா நெருப்பானாய்... பயிர்ப்பு

முன் நாளில் சொன்ன சாயல்
இன்னாளிலும் கண்டேனே
பெண்ணே உன்னிடம்...

என்னவளே,
தொடரட்டுமா, தொடவா...?
உன் நிழலை...