என் வீட்டு முற்றத்தில்
தகிக்கும் வெயிலில்
மனம் குளிர தென்றலானாய்...
அந்திப் பொழுதில் மழைச்
சாரலில் வானவில்லைக்
காண்கையில் வாடைக் காற்றானாய்...
மழை நின்ற போது
மணம் பரப்பி பூங்காற்றானாய்...
உனை நேசித்து
சுவாசித்த பொழுதுகள்
எத்தனை எத்தனை...
ஏனோ முன் இரவில் வீசிய
சூறாவளியால்
வேரற்று சாய்ந்து
அசைவற்று விட்டாயே...மரமே...