விடியும் வரை விழி மூடி
காத்திருந்தேன்...கனவில்
உனைக் காண...
விடிந்தபின் வழி நோக்கி
காத்திருந்தேன்...நேரில்
உனைக் காண...
நம் காதல்,
கல்யாணத்தில் விடியுமா? எனக்
காத்திருந்தேன்...
ஒவ்வொரு கணமும்...
கனலாய்க் காத்திருந்த
கணங்கள், கானல்
ஆகுமென அறியாமல்...
Showing posts with label விழி. Show all posts
Showing posts with label விழி. Show all posts
Friday, October 8, 2010
Tuesday, September 7, 2010
ஏக்கம்!
எம்மதமும் சம்மதம்,
யாதும் ஊரே யாவரும் கேளிர்,
அன்பே தெய்வம்... என்றாகிப் போனது
என் இயல்பு வாழ்க்கை...
பெரியோர் சொற்படி
உணர்ந்து நடக்கின்றேன்,
உணர்ந்து தான் நடக்கின்றேன் வாழ்வின்
ஒவ்வொரு அடியும்....உணர்வே
வாழ்வின் ஆதாரமாய்...
அதிசயமாய் வாழ்ந்தாலும்
அதிசயத்தைக் கண்டதில்லை...
அகத்தின் அழகு முகத்தில்
தெரிய வில்லை...எனவே
கண்டதும் காதல் வரவில்லை
எதிலும் எனக்கு...
அறு சுவை அறியும் என்னால்,
குறைந்தது ஒன்று...
ஆறறிவிலும், ஐம்புலன்களிலும்...
வெண்ணிற தாளில்,
நீல நிற மையில்,
பசும்புல் தரையில்,
கறு நிற கண்ணாடியுடன் நான்,
வண்ணம் என்னவென்று
எண்ணியவண்ணம்...
கண்காட்சி, கண்கொள்ளா காட்சி என்னவென்றும்,
அழகு, பேரழகு என்னவென்றும்,
கண்களால்
அறிய ஏக்கமாய்....
யாதும் ஊரே யாவரும் கேளிர்,
அன்பே தெய்வம்... என்றாகிப் போனது
என் இயல்பு வாழ்க்கை...
பெரியோர் சொற்படி
உணர்ந்து நடக்கின்றேன்,
உணர்ந்து தான் நடக்கின்றேன் வாழ்வின்
ஒவ்வொரு அடியும்....உணர்வே
வாழ்வின் ஆதாரமாய்...
அதிசயமாய் வாழ்ந்தாலும்
அதிசயத்தைக் கண்டதில்லை...
அகத்தின் அழகு முகத்தில்
தெரிய வில்லை...எனவே
கண்டதும் காதல் வரவில்லை
எதிலும் எனக்கு...
அறு சுவை அறியும் என்னால்,
குறைந்தது ஒன்று...
ஆறறிவிலும், ஐம்புலன்களிலும்...
வெண்ணிற தாளில்,
நீல நிற மையில்,
பசும்புல் தரையில்,
கறு நிற கண்ணாடியுடன் நான்,
வண்ணம் என்னவென்று
எண்ணியவண்ணம்...
கண்காட்சி, கண்கொள்ளா காட்சி என்னவென்றும்,
அழகு, பேரழகு என்னவென்றும்,
கண்களால்
அறிய ஏக்கமாய்....
Subscribe to:
Posts (Atom)